
மண்ணை படைத்துவிட்டு என் புன்னகை நிறுத்திவிட்டு
கண்ணை கலங்கவிட்டு கண்ணீர் வடியவிட்டு
அப்படி சிரிக்காதேடா கண்ணா அப்படி சிரிக்காதேடா
வெண்ணை திரட்டிவைத்த செம்பானையை உடைகாதேடா
கல் எறிந்து உடைகாதேடா துன்பத்தை வாழ்வில் கலக்காதேடா
அப்படி சிரிக்காதேடா கண்ணா அப்படி சிரிக்காதேடா
என்னையும் படைத்துவிட்டு பெண்ணையும் படைத்துவிட்டு
என்னுள் காதல்வைத்து எங்களுள் மோதல்வைத்து
அப்படி சிரிக்காதேடா கண்ணா அப்படி சிரிக்காதேடா
என்னை கதறவிட்டு நீ இங்கு சிரிப்பதேன்ன
என் கண்ணீர் வடிக்க உன் முகம் மகிழ்கிறதோ
சிரிப்பை நீ அடக்காதேடா கண்ணா அப்படி சிரிக்காதேடா
No comments:
Post a Comment