
நீ ஒரு பூந்தோட்டம் சுற்றிலும் வண்டோட்டம்
எழுதிய இப்பாட்டும் இரகசியம் காக்கட்டும்
செய்தி அறிந்தாலும் கூடிடும் தேன்கூட்டம்
நீ ஒரு பூந்தோட்டம் சுற்றிலும் வண்டோட்டம்
மேல்நாட்டு மேனகையே இதழுதிர்ந்த ரோஜாவோ
சிறுகண் மல்லிகையோ கருவிழி கருங்குவளை
சிரித்தால் செவ்வரளி படுத்தால் படர்முல்லை
கையோ செங்காந்தாள் மணிகழுத்து மண்வாழை
நீ ஒரு பூந்தோட்டம் சுற்றிலும் வண்டோட்டம்
குவளை கொங்கைகளும் கொன்றை விரல்களும்
தாமரை இதழ்நாவும் தும்பை முகர்மூக்கு
வஞ்சிக்கொடி இடையும் வாகை முடிமுடிவும்
செருந்தி செவிகளும் பிச்சி புன்னகையும்
நீ ஒரு பூந்தோட்டம் சுற்றிலும் வண்டோட்டம்
No comments:
Post a Comment