Thursday, November 3, 2011

இன்னும் என்ன மாயை

இன்னும் என்ன மாயை (2)
காரின்பின் ஒளிந்திருக்கும்
வெண்நிலவினை போல
இன்னும் என்ன மாயை (2 )
மாங்கனியுள் மறைந்திருக்கும்
மாம்புழுவை போல
இன்னும் என்ன மாயை

கண்முன் காணவில்லை கனவிலும் தோன்றவில்லை
நான் கண்ட இடமெல்லாம் உந்தன் நிழல் படரவில்லை
அறியாத என்முன்னே இன்னும் என்ன மாயை
இன்னும் என்ன மாயை ...

யாரேனும் கண்டிரோ அவள் ஒரு மாயை
இப்பூ உலகினில் அவள் ஒரு பாவை
அவள் ஒரு பாவை அவள் ஒரு மாயை
இன்னும் என்ன மாயை ...

No comments:

Post a Comment